Wednesday, 1 June 2011

புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?



தேர்தல் ஆணையத்தின் கண்டிப்போடும், அதன் கண்ணில் மண் தூவும் சாமர்த்தியத்துடனும்நடந்து முடிந்தது தேர்தல். இனி யாரோ ஒருவர் தலைமையில் ஆட்சி. 
யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் கவனம் சேலுத்த வேண்டிய பிரச்சினைகள் குவிந்து கிடக்கின்றன. புதிய ஆட்சி என்ன சேய வேண்டும்?
மின்சாரம், கல்வித்துறை, விவசாயம், வேலைவாப்பு ஆகிய உயிர்நாடியாகிய நான்கு முக்கியத் துறைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இங்கே சில கவன ஈர்ப்புத் தீர்மானங்கள்.
புதிய அரசு என்ன சேய வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்குகின்றனர் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள்.

மின்சாரம்: வெட்டு என்று விலகும்?
பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிற்துறையினர் என அனைத்துப் பகுதி மக்களையும் கடந்த மூன்றாண்டு காலமாக கடுமையாக பாதித்து வருகிறது மின்வெட்டுப் பிரச்சினை.
நமது மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆறு லட்சம் மின் இணைப்புகள் கூடிக்கொண்டே போகின்றன. அதனால், எட்டு சதவிகிதம் மின்சாரத் தேவை (சுமார் 500 மெகாவாட்) அதிகரித்து வருகிறது. இன்றைய நிலையில் மின்சாரத் தேவையின் அளவு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. தேவை அதிகரித்து வரும் நிலையில், தேவைக்கேற்ப மின்சார உற்பத்தி இல்லை. தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி சுமார் 3 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.
பற்றாக்குறையை சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டது. வெளிமாநிலங்களின் மின்சார விலை அதிகரித்ததால், தொடர்ந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கும் அளவுக்கு மின் வாரியத்தின் நிதி நிலை பலமாக இல்லை. அதனால், மின்வெட்டு.
விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. ஆனால், அதற்கான பணத்தை மின்வாரியத்திற்கு அரசு கொடுப்பதில்லை. 5 ஆயிரம் கோடி ரூபாக்கும் மேல் பாக்கி உள்ளது. இதனால், மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது.
மின்சாரத் தேவையை பூர்த்தி சேய புதிய மின் திட்டங்கள் சேயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு கூறுகிறது. அத்திட்டங்களால் உடனடிப் பலன் ஏற்படப்போவதில்லை. மேலும், புதிய திட்டங்களும்கூட தமிழகத்தின் மின்பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியாது என்கின்றனர் வல்லுநர்கள். அப்படியென்றால், நிரந்தரத் தீர்வுக்கு என்ன சேய வேண்டும்?
வல்லுநர் ஆலோசனை:
எம்.ஜி.தேவசகாயம்
(முன்னாள் தலைவர், ஹரியானா மின்சார வாரியம்)
மின்வெட்டுப் பிரச்சினைக்குகுறுகியகால மற்றும் நீண்டகாலத் தீர்வுகள் காணப்பட வேண்டியது அவசியம். தற்போதைய பிரச்சினைக்கு முழு முதல் காரணம், தவறான நிர்வாகம்தான். அதை முதலில் சரிசேய வேண்டும். கோரிக்கை (ஈஞுட்ச்ணஞீ) என்பதற்கும், தேவை (‡ஞுஞுஞீ) என்பதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. தேவையின் அடிப்படையில் மின்சாரத்தை சப்ளை சேதால் பிரச்சினையே வராது. கோரிக்கை அடிப்படையில் சப்ளை சேவதால் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே இருக்கும், தீர்வே இருக்காது. தொழில்துறை, விவசாயத்துறை, குடியிருப்புகள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் என்னென்ன தேவை என்பதை முழுமையாக ஆவு சேய வேண்டும். அந்த ஆவின் அடிப்படையில் மின்சாரத்தை சப்ளை சேதாலே முக்கால்வாசி பிரச்சினை தீர்ந்துவிடும்.
தமிழகத்தில் 30 சதவிகிதத்திற்கும் மேலாக மின்சார இழப்பு உள்ளது. அதை சரிசேவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மின்சாரம் வீணாவதைத் தடுப்பதற்கு, சிக்கனத்தின் மூலம் மின்சாரப் பாதுகாப்பு (ஞுணஞுணூஞ்தூ ஞிணிணண்ஞுணூதிச்ணாடிணிண)  மற்றும் மின்சார சேயல்திறன் (உணஞுணூஞ்தூ ஞுஞூஞூடிஞிடிஞுணஞிதூ) ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். துணை மின்நிலையங்களில் நவீனக் கருவிகள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டுவர வேண்டும்.
தமிழக அரசு, விவசாயிகளுக்குக் கொடுக்கிற மானியத்தில் நடக்கிற குளறுபடிகள் சரிசேயப்பட வேண்டும். அரசின் மானியத்தால் மிகப் பெரிய நிலச்சுவான்தார்கள் பயனடைந்து வருகின்றனர். சாதாரண விவசாயிகள் மட்டுமே இலவச மின்சாரத்தைப் பயன்படுத்துவதை உறுதி சேய வேண்டும். இலவச மின்சாரத்துக்கான பணத்தை மின்வாரியத்துக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டும்.
திறமையும், நேர்மையும் கொண்ட வல்லுநர்கள் அடங்கிய தன்னிச்சையான குழுவிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்துவிட வேண்டும். அதில் எந்த வகையிலும் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கவே கூடாது.



தமிழகத்தில் கல்வித்துறையில் ஏகப்பட்ட குழப்பங்களும், குளறுபடிகளும் நிலவுகின்றன. நடப்பு கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் சமச்சீர் கல்வி அமலுக்கு வருகிறது. தற்போது சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் வெளி வந்துள்ளன. இந்தப் பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை என்று தனியார் பள்ளிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், இப்புத்தகங்களை ஏற்க மாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இப்பிரச்சினையில் அரசு உறுதியான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும்.
இன்னொரு பிரச்சினை, கல்விக் கட்டணம் தொடர்பானது. தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் சேவதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க நியமிக்கப்பட்ட ஓவு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் பரிந்துரைகளை பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஏற்க மறுத்தன. நீதிமன்றத்தை நாடின.
தனியார் பள்ளிகளின் மேல் முறையீட்டு மனுக்களை ஆவு சேது முடிவு எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், குழுத் தலைவர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா சேதார் கோவிந்தராஜன். அவர் ஏன் ராஜினாமா சேதார் என்ற மர்மம் நீடித்த நிலையில், ஓவு பெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியனை புதிய தலைவராக அறிவித்தது தமிழக அரசு.  தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தி முடித்துவிட்டது ரவிராஜபாண்டியன் குழு. ஆனால், விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட மூன்று வாரங்களே உள்ள நிலையில், புதிய கட்டணங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மூன்றாவது முக்கிய விஷயம், கல்வி உரிமைச்சட்டம் (கீடிஞ்டணா ணாணி உஞீதஞிச்ணாடிணிண). இச்சட்டம் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. ஆனால், இப்படியொரு சட்டம் வந்திருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. மாணவர்களின் கல்வித்தரம் குறித்து அசார் ஆவு அறிக்கையில் ்தமிழ்நாட்டில் வாசிக்க முடிகிற, வகுத்தல் கணக்கை போடக்கூடிய குழந்தைகளின் சதவிகிதம் இந்திய சராசரியைவிட மிகவும் குறைவாக இருப்பதாகீ கூறப்பட்டுள்ளது. கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தீர்த்து, அனைவருக்கும் தரமான கல்வியை வழங்க புதிய அரசு என்ன சேய வேண்டும்?

கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிதாக வருகிற அரசு, தொலைநோக்குப் பார்வையுடன் சேயல்பட வேண்டும். சமச்சீர் கல்வியை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வரும் தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள், தற்போது புதிய பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை என்று குறை கூறுகின்றன. சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளைக் களைந்து, பாடத்திட்டங்களில் உள்ள தவறுகளை அடுத்த ஆண்டில் சரிசேது, எந்தவித சமரசமும் இல்லாமல் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை நிர்ணயம் சேவதற்கான குழு, ஒவ்வொரு பள்ளியிலும் பல்வேறு விஷயங்களை முழுமையாக ஆவு சேதபிறகே, கட்டணங்களை நிர்ணயம் சேதுள்ளது. எனவே, தனியார் பள்ளிகளின் நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல், அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை கறாராக அமல்படுத்த வேண்டும்.
சிறப்புக்கூறு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு முழுமையாகச் சேன்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்வழிக் கல்வியை புதிய அரசு கொண்டுவர வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் புதிய அரசு நிறைவேற்ற வேண்டும்.
மருத்துவப் படிப்பிற்கு அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்று தமிழக அரசு எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. இதே நிலைப்பாட்டில் வரப்போகிற அரசும் உறுதியாக இருக்க வேண்டும். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பொது நுழைவுத்தேர்வை ரத்து சேது, பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் முறையைத் தொடர வேண்டும். உயர்கல்வியைப் பொருத்தவரையில், பி.இ. தவிர வேறு படிப்பே இல்லை என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. பெரும்பாலான மாணவர்களின் கவனம் பி.இ. மீதுதான் இருக்கிறது. இந்த நிலையை வரப்போகிற அரசு மாற்ற வேண்டும். விவசாயத்தை அடிப்படையாக வைத்து பலவிதமான புதிய படிப்புகளைக் கொண்டுவரும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். கல்வியின் மூலமாக தமிழகத்தை ஒரு புரட்சிகரமான மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.



2006ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேலைவாப்பு அலுவலகங்களில் பதிவு சேதிருந்தவர்களின் எண்ணிக்கை 38 லட்சம். தற்போது 67 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஓர் ஆண்டிற்கு வேலைச்சந்தையில் வேலை தேடிவரும் இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 7 லட்சம்.
வேலையின்மை பிரச்சினை மிக மோசமான அளவிற்கு அதிகரித்துள்ளது. சுமார் 3000 வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம் சேகிறார்கள். அரசு வேலை கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக மாறிவிட்டது.  தமிழக அரசுத்துறைகளில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன.
குறிப்பாக, தலைமைச் சேயலகத்தில் 30 சதவிகிதத்திற்கும் மேலான பணியிடங்களும், வேலைவாப்பு அலுவலகங்களில் சுமார் 50 சதவிகித அளவிற்கும் காலியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் மொத்தப் பணியிடங்கள் 670. அங்கு, 320 பணியிடங்கள் காலியாக உள்ளன. 
தனியார் துறைகளில் ஏராளமான வாப்புகள் இருந்தும் புதிய வேலைவாப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் அரசுத் தரப்பில் இல்லை. போட்டிகள் நிறைந்த சூழலில், தகவல் தொடர்புத் திறன் உள்ளிட்ட மென் திறன்களை இளைஞர்களிடம் வளர்த்தெடுக்க போதிய ஏற்பாடுகள் இல்லை. இதனால், கல்வித் தகுதிகள் இருந்தும்கூட நிறைய இளைஞர்களால் வேலைவாப்பை பெற முடியவில்லை.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் ஏராளமான வேலைவாப்புகளை உருவாக்கித் தந்திருக்க முடியும். ஆனால், கடந்த காலங்களில் அப்படி எதுவும் நடக்கவில்லை. அரசு வேலைவாப்பு அலுவலகம் என்பது வெறும் பதிவு அலுவலகமாகவே இருக்கிறது. நிறைய வேலைவாப்புகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ்கேரியர் சேன்டர்ீகளாக வேலைவாப்பு அலுவலகங்களை மாற்ற வேண்டும். வேலைவாப்புத் திறன், வேலை தேடும் திறன் போன்ற திறமைகளை இளைஞர்களிடம் வளர்த்தெடுப்பதற்கான மையங்களாக மாற்றுவது உள்ளிட்ட பெரிய சீரமைப்புகளைக் கொண்டுவர வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான தொழில் ஒப்பந்தங்கள் (–ணிக்) போடப்பட்டன. அவற்றில் பல திட்டங்கள் நடைமுறைக்கு வரவே இல்லை. ஒப்பந்தம் போடப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் தொடங்க வைப்பதற்கான நடவடிக்கைக்கு புதிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களை சரியாகவும், முழுமையாகவும் இயங்க வைக்க வேண்டும். இதனால், ஒவ்வொரு மண்டலத்திலும் சராசரியாக 2 ஆயிரம் பேருக்கு வேலைவாப்பு கிடைக்கும். அந்த வகையில் மட்டுமே, 1 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு வேலைவாப்பை வழங்கியிருக்க முடியும். வரப்போகிற அரசு இவ்விஷயத்தில் கவனம் சேலுத்த வேண்டும்.
அதிகமான வேலைவாப்புகளை அளிக்கக்கூடிய சிறுதொழில்கள் மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு தனிக் கொள்கை கொண்டுவரப்பட வேண்டும். அவர்களுக்கு எளிதாக கடன் வசதி கிடைக்க வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போல இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
சேன்னை - ஓசூர் சாலையை தொழிற்சாலைகள் நிறைந்த சாலையாக, அதாவது ஓர் என்ஜினீயரிங் சேன்டராக அதை மாற்ற முடியும். அதன் மூலம் லட்சக்கணக்கான வேலை வாப்புகளை உருவாக்க முடியும். இதுபோல நிறைய யோசனைகள் உள்ளன.
இளைஞர்களின் திறன் வளர்ப்புக்கான மத்திய அரசின் நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அந்த நிதியை வைத்து இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாப்பு பயிற்சிகளை அளித்திருக்க முடியும். வரப்போகிற அரசு, அந்த நிதியை மீண்டும் பெற்று இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும்.
முதல் ஓர் ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் வேலைவாப்புகளை உருவாக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொள்ளவேண்டும்.


இன்றைக்குக் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள துறைகளில் முதன்மையானது வேளாண்மை. லாபகரமான தொழிலாக விவசாயம் இல்லை என்பது மட்டுமல்ல, அதற்காக சேலவு சேகிற பணத்தைக்கூட விவசாயிகளால் எடுக்க முடியவில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு.
கடந்த சில ஆண்டுகளில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. பல மணிநேர மின்வெட்டு காரணமாக, தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயம் தத்தளித்து வருகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. விவசாயிகளின் உழைப்பால் உற்பத்தி சேயப்பட்ட பொருட்களுக்கு அந்த விவசாயிகளாலேயே விலை நிர்ணயம் சேய முடியவில்லை. இத்தகைய மோசமான சூழலால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத் தொழிலைக் கைவிடும் ஆபத்து உருவாகியுள்ளது.
நகரங்களில் மட்டுமன்றி, கிராமப்புறங்களிலும்கூட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விவசாயம் சேவதைக் காட்டிலும் விவசாய நிலத்தை விற்பனை சேதால் நிறைய பணம் கிடைக்கிறது. விவசாயத்தால் லாபம் கிடைக்கவில்லை என்பதால், விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் விற்பனை சேவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுகின்றன. சாகுபடி பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது.
தேசியக் கிராமப்புற வேலை வாப்பு உறுதித்திட்டத்தின்கீழ் விவசாயம் அல்லாத பணிகள் எடுக்கப்படுகின்றன. இதனால், விவசாயப் பணிகளுக்குத் தேவையான தொழிலாளர்கள் கிடைப்பதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 
காகறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை சேமித்து வைப்பதற்கான குளிர்பதனக் கிடங்குகள் (இணிடூஞீ குணாணிணூச்ஞ்ஞுண்) தமிழகத்தில் இல்லை. இதனால், அந்தந்த சீசனில் விளைகிற காகறிகள், பழங்கள் போன்றவை பெருமளவில் அழுகி வீணாவதோடு, விவசாயிகளும் பெரும் நஷ்டம் அடைகின்றனர்.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே வேளாண் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் மாவட்ட, தாலுகா மையங்களில் வேளாண் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் விவசாயத்தை மீட்டெடுக்க புதிய அரசு என்ன சேய வேண்டும்?


சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் எடுக்கப்படுவதைத் தடை சேது சட்டம் கொண்டுவர வேண்டும். நிலத்தை 3 ஆண்டுகளுக்கு தரிசாகப் போட்டு, பின்னர் ரியல் எஸ்டேட்டாக மாற்றப்படுவதைத் தடுப்பதற்கும் சட்டம் கொண்டுவர வேண்டும். தரிசாக போடப்படும் நிலங்களை அரசே கையகப்படுத்தி, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
கிராமப்புற வேலைவாப்பு உறுதித்திட்டத்தை வேளாண்மைக்கும் விரிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் 100 நாள் உழைப்பு என்பதை 200 நாள் உழைப்பாக மாற்ற வேண்டும். ஆறுகளையும், நிலத்தடி நீரையும் பாதுகாப்பதற்காக, மணற்கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகள் அனைவருக்கும் கூட்டுறவுக்கடன் கிடைப்பதை உறுதி சேய வேண்டும். சந்தைப்படுத்துதலில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளில் இயற்கை முறை விவசாயத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தைப் போல, வேளாண்துறையில் இயற்கை விவசாயத்திற்காக தனியாக கிளை தொடங்க வேண்டும். அதற்கு போதிய நிதி ஒதுக்கீடு சேய வேண்டும்.
அண்டை மாநிலங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆகிய பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக விவசாய அமைப்புகள் உள்ளடக்கிய அனைத்துக்கட்சி குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

No comments:

Post a Comment